பல சிந்தனைகளுக்குப் பிறகு இந்த காவியக் கதை எழுத்துருவம் பெறுகின்றது. இக்கதை ஒரு பெண்ணின் தோழிக்கும் அவள் தத்து அண்ணனுக்கும் இடையே நடக்கும் மோதல் காதல் மற்றும் அதை சுற்றி நடக்கும் சுவாரஸ்யங்களையும் எடுத்துரைக்கின்றது.ஒரு மனிதன் தனக்கு மற்றவருடன் ஏற்படும் ஈர்ப்பை தெளிவாக உணராமல் செய்வதறியாது தத்தளிப்பதும், உணர்ந்த பின் அதை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல் தடுமாறுவதும் வாழ்வில் இயல்பு. ஒரு சிலர் தெளிவாக ஒரு புது உறவின் அவசியம், அதனால் நடைமுறையில் இருக்கும் வாழ்வு , குடும்பம், நட்பு, எவ்வாறு மாறுபடும் என்பதை ஆராய்ந்து அறிந்து முடிவு எடுக்கும் தன்மையினராய் இருப்பார்கள். மற்ற சிலரோ எதைப் பற்றியும் கவலை இன்றி தன் சுகம், இன்பம், இவற்றை மற்றும் கருதி வாழ்கையைத் தொடர்வார்கள்.பல இடங்களில் ஆணும் பெண்ணும் இணைந்தே முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் இந்தக் கதையிலோ நாம் முற்றிலும் மாறுபட்ட இரு மனிதர்களை சந்திக்க இருக்கிறோம். இவ்விருவரும் பல செயல்களில் எண்ணங்களில் ஒரே சிந்தனைப் படைத்தவர்கள். ஆனால் இருவருக்கும் "ஈகோ" எனப்படும் ஒரு கொடிய குணம் உண்டு. இதனால் அவர்கள் வாழ்வில் எவற்றை
எல்லாம் தவறவிடுகின்றனர், சுற்ற முற்றம் உள்ள நண்பர்கள் உள்ளாக்கப்படும் அவதி ஆகியவற்றைக் காணலாம். இந்த கதையின் மூலம் நான் கூற முற்படும் கருத்து "ஈகோ" ( எட்சிங் காட் அவுட்) என்பதை விட்டு வெளியே வந்தால் வாழ்வு நாம் விரும்பும் வகையில் அமைவதோடு நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியாக வைக்கும் என்பதே!
இதுவரை கூறியது போதும், படியுங்கள் மகிழுங்கள் !